1 Jul 2020

இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
(ராஜ்)

இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்டக்கிளை  கூட்டம் நேற்றைய தினம் 28ம் திகதி மாலை தமிழ் தேசிக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுடைய இல்லத்தில் நடைபெற்றது இக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மாவட்டக்கிளை தலைவரும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமாகிய ச.குகதாசன் மற்றும் ஏனைய வேட்பாளர்கள் என பலர் கலந்து கொண்டருந்தனர்.

இதன் போது எதிர்வருகின்ற தேர்தலில்  கட்சியின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.என ஆராயப்பட்டது.அதற்கான ஆலொசனைகளும் கலந்துரையாடல்களும் இடம் பெற்றது..

அத்துடன் மிக முக்கிய தீர்மானமாக நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தே.தே.கூ வேட்பாளர்கள் அணைவரும் திருகோணமலை வாக்காளர்கள் மத்தியில் காலத்தின் தேவை அறிந்து திருகோணமலை மாவட்டத்தின் அரசியல் முதிர்ச்சியும் தமிழ் மக்களின் பிரச்சினையை தேசியம் முதல் சர்வதேசம் வரை எடுத்துரைக்க கூடிய அரசியல் ஞானமும் அறிமுகம் உள்ள முன்னால் எதிர்கட்சித் தலைவரும் இத் தேர்தலின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய இரா.சம்பந்தன் அவர்களுக்கும் அவருடைய இலக்கமான 1ம் எண்ணுக்கும் வாக்கு சேகரிப்போம் எனவும் ஏனைய வேட்பாளர்கள் தமது இலக்கங்களுக்கும்  மூன்றாவது விருப்பு வாக்கினை மக்கள் விரும்பிய இன்னுமொரு வேட்பாளருக்கும் வாக்காளர்களிடம் கோருமாறு மாவட்டக்கிளை பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் அணைவரும் இணைந்து தீர்மானம் எடுத்தனர் இத்தீர்மானத்தை சகலரும் முழுமனதோடு ஏற்றுக் கொண்டுள்ளதாக கட்சியின் மாவட்டக்கிளையின் தலைவர் க.குகதாசன் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: