4 Jun 2020

குருநானக்சேவா அறக்கட்டளையினால் பொருட்கள் வழங்கி வைப்பு.

SHARE
குருநானக்சேவா அறக்கட்டளையினால் பொருட்கள் வழங்கி வைப்பு.
கோவிட் - 19 எனப்படும் புதியவரை வைரஸ் தாக்கத்தினால் பீடித்துள்ள கொரோனா நோய் நிலமை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு பலரும் தங்களாலான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் குருக்கள்மடம் தீர்த்தக்குளவீதியில் அமைந்துள்ள குருநானக்சேவா அறக்கட்டளையினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குருமடம்வடக்கு, தெற்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள 75 குடும்பங்களுக்கும், செட்டிபாளையம் கிராமத்திலுள்ள 25 குடும்பங்களுக்கும், இதன்போது பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சிவ சுதர்சனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிராம சேவை உத்தியோகஸ்த்தர், ஆலயங்களின் பிரதிநிதிகள்  அறக்கட்டளை உறுப்பினர்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு வழங்கிவைக்கப்பட்டது. 









SHARE

Author: verified_user

0 Comments: