23 Jun 2020

தமிழர்கள் தீர்மானமிக்க சக்தியாக மாறவேண்டும் -இரா.சாணக்கியன்.

SHARE


தமிழர்கள் தீர்மானமிக்க சக்தியாக மாறவேண்டும் -இரா.சாணக்கியன்.இந்த நாட்டில் ஒரு தீர்மானம் மேற்கொள்ளும் சக்தியாக மாறும்போதே தமிழர்கள் முழுமையான அபிவிருத்தியை நோக்கி செல்லமுடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமையினை நிலைநாட்டும் ஒரேயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அடிப்படையிலேயே அதன் ஊடாக தேர்தலில் களமிறங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வடகிழக்கில் நாங்கள் தமிழர்களின் பிரதிநித்துவத்தினை அதிகரிக்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும் வகையிலான முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்துவருகின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை தவிர்த்து களமிறங்கியுள்ள ஏனைய தமிழ் கட்சிகள் தமிழர்களுக்கு கிடைக்கவிருக்கும் நான்காவது ஆசனத்தினை மழுங்கடிப்பதற்கே களமிறங்கியுள்ளனர்.

எனது கடந்தகால அரசியல் செயற்பாட்டில் நான் அறிந்த உண்மையென்னவென்றால் இந்த நாடு தமிழர்களுக்கும் சொந்தமான நாடு என்று இலங்கையில் கூறும் ஒரெயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புதான்.இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு இணையாக தமிழ் மக்களுக்கும் உரிமையிருக்கின்றது என்று வாதாடும் ஒரேயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டும்தான்.

இந்த நாடு தமிழ் மக்களுக்கும் சொந்தமான நாடு என்பதிலிருந்து விலகி இது பௌத்த நாடு என்று அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே இன்று பேரினவாத அரசாங்கம் விரும்புகின்றது. அதற்குரிய சந்தர்ப்பத்தினை நாங்கள் வழங்கமுடியாது. அதற்கான நடவடிக்கையினை நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக மட்டுமே முன்னெடுக்கமுடியும்.

அபிவிருத்தி என்பது பாலங்கள், கட்டிடங்களும் பொதுக்கட்டிடங்களுமில்லை. நாங்களே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்போதே நாங்கள் முழுமையான அபிவிருத்தியை அடையமுடியும்.

தமிழர்களின் உரிமைப்போராட்டத்தினை தீர்வு கிடைக்கும் வரையில் இந்த போராட்டம் இளைஞர்களின் கைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுகின்றேன்.

தான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படுமிடத்து கிழக்கு மாகாணத்தின் தொல்பொருட்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
SHARE

Author: verified_user

0 Comments: