16 Jun 2020

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட விவசாய தோட்டத்தில் அறுவடை நிகழ்வு இடம்பெற்றது.

SHARE
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு  கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில்  மேற்கொள்ளப்பட்ட விவசாய தோட்டத்தில் அறுவடை நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட விவசாய உற்பத்தியின் அறுவடை நிகழ்வு செவ்வாய்கிழமை (16) இடம்பெற்றது.

வங்கி முகாமையாளர் பிரியதர்சினி அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சுபா சதாரன் கலந்துகொண்டு விளை பொருட்களை அறுவடை செய்து நிகழ்வினை அரம்பித்துவைத்தார்.

அரசாங்கத்தின் சௌபாக்கியா வீட்டுத் தோட்டத்துடன் இணைந்ததாக மேற்கொள்ளப்படும் இத்தோட்டமானது, கரவெட்டி சமுர்த்தி வங்கி முகாமையாளரின் ஆலோசனைக்கமைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  இத்தோட்டத்தில் கத்தரி, மரவள்ளி. மிளகாய், வற்றாளை போன்ற மரக்கறிவகைகளுடன் மாம்மழங்களும் இதன்போது அறுவடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



SHARE

Author: verified_user

0 Comments: