5 May 2020

பாடசாலை வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டினார் சரணியன்.

SHARE
(திலக்ஸ்)

பாடசாலை வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டினார் சரணியன்.
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப்பற்று கல்விக் கோட்டத்தில் உள்ள முனைத்தீவு சக்தி மகா வித்தியாலய பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக இராஜசேகரம் சரணியன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஒன்பது பாடங்களிளிலும் "A" சித்திகளை பெற்று வரலாற்று சாதனையை பாடசாலையில் பதிவு செய்துள்ளார். 

இந்த மாணவன் தரம் 01 தொடக்கம் தரம் 11 வரையும் இந்த பாடசாலையிலே கல்வி கற்று வருகின்றார். தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையிலும் சித்தியடைந்துள்ளார். இவர் ஒரு பொறியியலாளாராக வருவதே தனது எதிர்கால இலட்சியம் எனவும், எதிர்கால சந்ததி வகுப்பு வகுப்பு என்று ஓடாமல் சுயகற்றலை நன்றாக விளங்கி செய்தாலே இலகுவாக சித்தியடையலாம் எனவும், பட்டிருப்பு கல்வி வலய பணிப்பாளார், கோட்டக்கல்வி பணிப்பாளார், அதிபர் சு.உதயகுமார் மற்றும் ஆசிரியர்களுக்கும் விசேடமாக கருணாகரன் மற்றும் இராசநாயகம் ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்திற்கும் நன்றிகளை தெரிவித்தார். 

இந்த பாடசாலை கடந்த ஆண்டுகளை விட இந்த வருடம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: