11 May 2020

சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SHARE
(உதயா)

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் ஜூலை  மாதம்  27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்றைய தினம் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் ஜூலை  மாதம்  27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு குற்றவியல் சிவில்  மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் அவர்களினால் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டு எதிர்வரும் ஜூலை  மாதம்  27ஆம், 28ஆம் திகதிகளில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நீதிபது உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி  மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில்  கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக என்.எம். அப்துல்லா பதிவி யேற்றதையடுத்து குறித்த வழக்கின் சாட்சியாளராக மேல் நீதிமன்ற நீதிபதி இருந்த காரணத்தால் குறித்த வழக்கிற்கு மட்டக்களப்பு குற்றவியல் சிவில்  மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் சட்டமா அதிபர் திணைக்களத்தால் நியமிக்கப்பட்டதையடுத்து கடந்த மாதம் 17ஆம்  திகதி நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட போதிலும் அன்றைய தினம் குறித்த வழக்கை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி டி.சூசைதாசன் விசேடமாக எடுத்துக் கொள்ளப்பட்டு ஏப்பில் 2ஆம் திகதிக்கு ஓத்திவைக்கப்பட்டது குறுப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user

0 Comments: