18 Apr 2020

களுவாஞ்சிகுடி வைத்தியசாலையின் அம்பியுலன்ஸ் நோய்காவு வண்டி மீது காத்தான்குடியில் வைத்து தாக்குதல்.

SHARE
களுவாஞ்சிகுடி வைத்தியசாலையின் அம்பியுலன்ஸ் நோய்காவு வண்டி மீது காத்தான்குடியில் வைத்து தாக்குதல்.
மட்டக்கப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அம்பியுலன்ஸ் வண்டி மீது காத்தான்குடியில் வைத்து வைத்து கல்லெறி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது… வெள்ளிக்கிழமை (17) களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளியை அனுமதித்துவிட்டு திரும்பிய அம்பியுலன்ஸ் வண்டி மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. 

இதன்போது அம்பியுலன்ஸ் வண்டியின் ஒரு பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் குற்றத்தடவியல் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் க.புவநேந்திரநாதன் தெரிவித்தார்.


















SHARE

Author: verified_user

0 Comments: