27 Apr 2020

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் பயணித்த கார் விபத்து

SHARE

மட்டக்களப்பு அரசடிப் பகுதியில் முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் பயணித்த கார் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் காரில் பயணித்த முன்னாள் பிரதி அமைச்சர் உட்பட இருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்...

கொழும்பில் இருந்து கல்முனைக்கு சென்று கொண்டிருந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மதிலை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற விபத்தின் போது, மருத்துவ பீடத்தின் மதிலில் கார் மோதியதுடன் உள்ளிருந்த கட்டிடத்திலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது காரில் பயணித்த முன்னாள் பிரதியமைச்சரும் அவரது மகளும் எந்தவித காயங்களும் இன்றி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

இதன்போது கார் கடும் சேதமடைந்துள்ளதுடன் நித்திரை தூக்கம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.









SHARE

Author: verified_user

0 Comments: