கொரோனா நடவடிக்கையில் சிகிச்சையளிக்கும் வைத்தியர்களுக்கு பாதுகாப்பான வைத்திய அங்கிகளை பாம் பௌண்டேஷன் நிறுவனம் அன்பளிப்பு.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் நோயாளருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்களுக்கு பாதுகாப்பான வைத்திய அங்கிகளை அன்பளிப்புச் செய்ய அமெரிக்க உதவித்திட்டத்தில் இயங்கும் பாம் பௌண்டேஷன் தொண்டார்வ நிறுவனம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வியாழக்கிழமை (09) அன்பளிப்பு செய்துள்ளது.
இந்நிறுவத்தின் உத்தியோகத்தர்கள் குழு வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம் மாவட்ட செயலகத்தில் வைத்து சுமார் இரண்டு இலட்சத்தி 80 ஆயிரம் ரூபா பெறுமதியான பாதுகாப்பான வைத்திய அங்கிகளை கையளித்தனர். இவற்றை பிராந்திய தொற்று நோயியல் வைத்திய அதிகாரி எஸ்.குணராஜசேகரம் அரச அதிபரிடம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனூடாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நிருவாகத்தில் செயல்படும் வைத்தியசாலை வைத்தியர்களுக்கு சிகிச்சை வழங்க பெரிதும் எதிர்பாக்கப்படுகின்றது.
0 Comments:
Post a Comment