14 Mar 2020

மட்டக்களப்பு களுதாவளையில் சனிக்கிழமை அதிகாலை பாரிய விபத்து

SHARE
மட்டக்களப்பு களுதாவளையில் சனிக்கிழமை அதிகாலை பாரிய விபத்து.
மட்டக்களப்பு மவாட்டம் களுவஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரான வீதியின் களுதாவளையில் சனிக்கிழமை (14) அதிகாலை 5.15 மணியளவில் பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித:துக் கொண்டிருந்த சொகுசு போரூந்து ஒன்று முன்னால் துவிச்சக்கர வண்டியில் சென்ற மீன்வியாபாரிக்கு வழிவிடுவதற்கு முற்பட்டவேளை போரூந்து அவரின்மீது மோதுண்டு அருகிலிருந்த மின்கம்பத்தின் மீது மோதியுள்ளது. 


அதிகாலை வேiளியல் பிரதேசம் எங்கும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன் திடீரென் வெளியில் சத்தம் கேட்க அருகிலிருந்தவர்கள் வெளியில் வந்த பார்த்தபோது விபத்தை அவதானித்துள்ளனர். பின்னர் பேரூந்தின் யான்னல்கள் உடைக்கப்பட்டு பணயிகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவத்தினால் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாக களுவாஞ்சிகுடி தோர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா iவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்தப் பொலிசார் விசாரணைகளை முன்நெடுத்துள்ளனர்.









SHARE

Author: verified_user

0 Comments: