27 Feb 2020

ஒரு லெட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்குரிய நேர்முகத் தேர்வு இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

SHARE
ஒரு லெட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்குரிய நேர்முகத் தேர்வு இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
நாட்டில் ஒரு லெட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வேலைவாய்ப்புக்களை வழங்கவதற்காக நேர்முகத் தேர்வுகள் நாடெங்கிலுமுள்ள பிரதேச செயலகங்கள் தோறும்  புதன்கிழமை (26) முதல் நடைபெற்று வரும் இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்கள் தோறும் சுமூகமான முறையில் விறுவிறுப்புடன் இடம்பெற்று வருவதோடு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் மிகவும் ஆர்வத்துடன் குறித்த நேர்முகத் தேர்வில் பற்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்குரிய நேர்முகத் தேர்வு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. இத்தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதற்கு 2100 பேர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலிருந்து விண்ணப்பித்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் தெரிவித்தார்.

இராணுவத்தினர் பிரதேச செயலக உயரத்திகாரிகள் உள்ளிட்டோர் இந்தேர்முகத்தேர்வை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
















SHARE

Author: verified_user

0 Comments: