22 Feb 2020

மட்டக்களப்பில் ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி எனும் பெயரில் புதிய கூட்டு உதயம்.

SHARE
மட்டக்களப்பில் ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி எனும் பெயரில் புதிய கூட்டு உதயம்.
கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் முயற்சியால் ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி எனும் பெயரில் புதிய கூட்டு உருவாக்கப்பட்டுள்ளது.


வௌ்ளிக்கிழமை 21ம் திகதி பிற்பல் மேற்படி ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு தமிழர் ஒன்றிய தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தனர்.

இதில் ரி.சிவநாதன் தலைமையிலான கிழக்கு தமிழர் ஒன்றியம்,

 வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, 

எஸ்.வியாழேந்திரன் தலைமையிலான   முற்போக்கு தமிழர் அமைப்பு

 சோ. கணேசமூர்த்தி தலைமையிலான இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி  மற்றும் வி.முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி  ஆகிய ஐந்து கட்சிகளும் இணைந்து உதயசூரியன் சின்னத்துடன்   தமிழர் ஐக்கிய முன்னணி எனும் பெயருடன் புதிய கூட்டு உதயமாகியுள்ளது.

அனைத்துக் கட்சிகளையும் இணைத்து ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிடவேண்டும் எனும்  இரண்டு வருட தீவிர முயற்சியால் இன்று கைகூடியிருக்கின்றது என  இதன்போது ரி.சிவநாதன் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: