27 Feb 2020

குழந்தையில்லா தம்பதியினருக்கான இலவச கருத்தரிப்பு ஆலோசனை வைத்திய முகாம்.

SHARE
குழந்தையில்லா தம்பதியினருக்கான இலவச கருத்தரிப்பு ஆலோசனை வைத்திய முகாம்.
மட்டக்களப்பு ஏறாவூரில் எதிர்வரும் ஞாயிறன்று 01.03.2020 குழந்தையில்லா தம்பதியினருக்கான மாபெரும் இலவச கருத்தரிப்பு வைத்திய முகாமை (Advance Fertility Clinic)   நடாத்தவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் அல் முனீறா மகளிர் மகா வித்தியாலயத்தில் காலை 9 மணி தொடக்கம் பகல் 1 மணிவரை இந்த இலவச வைத்திய முகாம் இடம்பெறவுள்ளது.

இதில் குழந்தைப்பேறில்லா தம்பதிகள் கலந்துகொண்டு பிள்ளைப்பேறு சம்பந்தமான வைத்திய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் சிகிச்சைகளையும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஏற்பாட்டுக் குழவின் சார்பில் மணவை அசோகன் தெரிவித்தார்.
இந்திய மகப்பேற்று வைத்திய நிபுணர்களான நிர்மலா சதாசிவம், ஸ்ரீரேவதி சதாசிவம், எம்.என். சதாசிவம் ஆகியோர் இந்த வைத்திய முகாமில் நேரடியாகக் கலந்துகொண்டு வைத்திய ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் அவர்களும் சிறப்பு அதிதியாக ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேலும் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.



SHARE

Author: verified_user

0 Comments: