மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மூன்றாம்கட்டை ஆயித்தியமலை வீதியில் பொலிஸ் சாஜன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இன்று வியாழக்கிழமை(06ம் திகதி) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு போலீஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 55 வயதையுடைய 3 பிள்ளைகளின் தந்தையான தம்பாப்பிள்ளை தம்பாப்பிள்ளை சிவராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் சார்ஜன் 3ம் கட்டையில் உள்ள தனது பண்ணையினை பார்வையிடுவதற்காக புதன்கிழமை இரவு வந்த நிலையில் இனந்தெரியாத நபர்களினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இவர் வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி தற்போது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவராவார்.
இவரது மரணம் தொடர்பில் பொலிஸ் மோப்ப நாய்களுடன், சோக்கோ பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விஷேட அதிரடிப்படை உள்ளிட்ட புலனாய்வு அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
கொலை செய்பப்பட்ட இடத்தையும் பொலிஸாரின் சடலத்தையும் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர், மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்டோர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளதுடன், விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment