13 Jan 2020

மேற்கத்தைய நாடுகளில் நாட்டு தலைவர்கள் மக்களேடு மக்களாக பயணிப்பது போன்று எமது ஜனாதிபதி முன்மாதிரியாக செய்து காட்டி வருகின்றார் வியாழேந்திரன் எம்.பி

SHARE
மேற்கத்தைய நாடுகளில் நாட்டு தலைவர்கள் மக்களேடு மக்களாக பயணிப்பது போன்று எமது ஜனாதிபதி முன்மாதிரியாக செய்து காட்டி வருகின்றார் வியாழேந்திரன் எம்.பி
மேற்கத்தைய நாடுகளில் நாட்டு தலைவர்கள் மக்களேடு மக்களாக பயணிப்பது போன்று எமது ஜனாதிபதி முன்மாதிரியாக செய்து காட்டி வருகின்றார். ஜனாதிபதி, பிரதமர் கடந்த நான்கரை வருடங்களில் செய்து முடிக்காத வேலைகளை புதிய அரசாங்கம் கடந்த 45 நாட்களில் செய்துள்ளது. 

என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாதாசிவம் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் திங்கட்கிழமை (13) அவரது காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்  இவ்வாறு கருத்து தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..

ஜனாதிபதி தான் வழங்கிய வாக்குறுதிகளை சிறப்பாக செயல்படுத்தி  வருகின்றார். ஊழல் இல்லாத நிர்வாகத்தை மக்களுக்கு வழங்கும் நோக்குடன் கிராமபுற மக்களின் அபிவிருத்திகென கல்வி பொருளாதாரம் உட்பட சகல துறைகளிலும் கவனம் செலுத்தப்படுகிறன. அவர் இன்று சாதாரண நபராக சென்று பொது இடங்களில் மக்களின் தேவைகளை மேற்கத்தேய நாடுகளில் அரசியல் தலைவர்கள் மக்களேடு மக்களாக பயணிப்பது போன்று  எமது ஜனாதிபதியும் ஏனைய அரசியல் தலைவர்களுக்கு, முன்மாதிரியாக செய்து காட்டி வருகின்றார். இதனை பார்த்து ஏனையவர்களும் கைகொள்ள வேண்டும்.

ஜனாதிபதி, பிரதமர் கடந்த நான்கரை வருடங்களில் செய்து முடிக்காத வேலைகளை புதிய அரசாங்கம் கடந்த 45 நாட்களில் செய்துள்ளது. எமது மாவட்டத்திற்க்கு கடந்த 45 நாட்களில் 690 மில்லியன் ருபா கிராம அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது போல் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வட மாகாண ஆளுநராக முதல் பெண்மணி சார்ள்ஸ் அம்மணியை நியமித்ததர்கு ஜனாதிபதிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். என அவர் இதன்போது தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: