நோயாளி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு.
செவ்வாய்க்கிழமை 28.01.2020 இடம்பெற்ற இச்சம்பவத்தில் வாழைச்சேனை, கருணைபுரம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை பிள்ளையான் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிள்ளையான், கடந்த ஒன்பது வருடங்களாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு வைத்தியசாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment