காட்டு யானை தாக்கி வயல் காவலாளியான முதியவர் பலி.மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள காரைக்காடு கணங்குளமடு நெல் வயலுக்குள் வயல் காவலாளியான முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை 07.01.2020 இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் வந்தாறுமூலை ஆலையடி வீதியை அண்டி வசித்து வந்த பூபாலப்பிள்ளை குமாரசாமி (வயது 74) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, வழமைபோன்று இந்த முதியவர் நெல் வயல் காவலுக்கு நின்றிருந்தபோது காட்டுப் பக்கமிருந்து திடீரென காட்டு யானைகள் வயல்பக்கம் பிரவேசித்துள்ளன.
வயல் காவலுக்குச் சென்றவர் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரைத் தேடிச் சென்ற பொழுது அவர் நெல் வயலுக்குள் இறந்த நிலையில் வீழ்ந்து கிடந்துள்ளார்.
கரடியனாறு பொலிஸாரும் அந்த இடத்தில் குற்ற விசாரணைப் பிரிவு(Scene of the Crime
Officers) சோகோ பொலிஸாரும் இணைந்து செவ்வாய்க்கிழமை சடலத்தை மீட்டு உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதோடு மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment