23 Jan 2020

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.

SHARE
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான விசாரணை பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் 25.12.2005 அன்று மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கு மீதான விசாரணை புதன்கிழமை 22.01.2020 மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என். அப்துல்லாஹ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது பெப்ரவரி 25ஆம் திகதி வரை வழக்கை நீதிபதி  ஒத்திவைத்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண  முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம், இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் மீராலெப்பை கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்ஹ (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: