26 Jan 2020

எனது ஓய்வுக்காலம் முடிவதற்கு முன்னர் தற்போது ஓய்வு பெற்றுச் செல்வதற்குத் தள்ளப்பட்டுள்ளேன் - மட்டக்களப்பு அரசாங்க அதிபர்.

SHARE
எனது ஓய்வுக்காலம் முடிவதற்கு முன்னர் தற்போது ஓய்வு பெற்றுச் செல்வதற்குத் தள்ளப்பட்டுள்ளேன் - மட்டக்களப்பு அரசாங்க அதிபர்.

அரச சேவையில் சனிக்கிழமை (25.01.2019 வரையில்) 32 வருடங்களையும், ஒரு மாதத்தையும் 10 தினங்களையும் நிறைவு செய்திருக்கின்றேன். ஒரு பட்டதாரி ஆசிரியராக அரச சேவைக்கு உள்ளீர்க்கப்பட்ட நான் படிப்படியாக முன்னேறி இம்மாவட்டத்தின் உயர் பதவியான அரசாங்க அதிபராக இருந்து தற்போது தவிர்க்க முடியாத காரணத்தினால் எனது ஓய்வுக்காலம் முடிவதற்கு முன்னர் தற்போது ஓய்வு பெற்றுச் செல்வதற்குத் தள்ளப்பட்டுள்ளேன். குறிப்பாக 23.11.2017 இல் இம்மாட்டதை அரசாங்க அதிபராக பொறுப்பேற்ற எனக்கு 2 வருடங்களும், 2 மாதங்களும், ஒரு நாளும் எனக்கு இம்மாவட்டத்தை நிருவகிக்கக் கிடைத்தது. எனது நேர்மையான இக்கடமைக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தள்ளார். அவரது காரியாலயத்தில் சனிக்கிழமை (25) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே  அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….. 

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் என்ற கருதுத்து உலா வருகின்றமை கவலையளிக்கின்றது. மக்கள் இதனால் பல்வேறு குளப்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். மாவட்ட நிருவாகத்தைக் கவனிகும் அரசின் பிரதிநிதிதான் அரசாங்க அதிபராவார். காலத்திற்குக் காலம் மக்களால் உருவாக்கப்படுகின்ற அரசின கொள்கைகளை, சரியாகவும், நேர்த்தியாகவும் செயற்படுத்துவதே அவருக்கான பணியாகும். 

இதற்கான நியமனத்தை மாகாணசபைகள் உளுராட்சி அலுவல்கள், அமைச்சு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன், இலங்கை நிருவாக சேவையின் அதி உயர் வகுப்பான  அதிவிசேட தரத்தைச் சார்ந்த அனுபவம், நேர்மை, திறமை, விவேகம் என்பவற்றின் அடிப்படையில், இதற்கான உத்ததியோகஸ்த்தர் தெரிவு செய்யப்படுவர். 

அண்மைய செய்திகள் கறைபடிந்த கைகளும், கடத்தல் பேர்வழிகளும், கலகக் காரர்களும், கூட்டாகவோ, தனித்தோ, இப்பதவிகான உத்தியோகஸ்த்தர்களைத் தெரிவு செய்கின்றார்களோ என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அரசுடன் பேரம்பேசுவதாகவும், தமது பதவிகளை இரானாமா செய்வதாகவும், விரட்டுவதாகவும் வெளியாகும் தவவல்களுக்காக வேதனையடைகின்றேன். 

இருப்பினும் அமைச்சரவையினால் 24.01.2020 அன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக ஒருவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளாhக அறிய முடிகின்றது. அது எமக்கு இதுவரையில் உத்தியோக பூர்வமான அறிவித்தல் எதுவும் கிடைக்கவிலலை. 

இலங்கை நிருவாக சேவையில் இருந்து வெறுமனே 10 மாதங்களும் 18 நாட்களும் உள்ள எனக்கு எவித குற்றங்களும் இளைக்காமல், எதுவித விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாமல், சேவையிலுள்ள என்னை எதுவித முன்னறிவித்தலுமின்றி, இடமாற்றம் வழங்கப்படுவதைதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: