13 Dec 2019

மட்.புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயலயத்தில் வருடாந்த ஒளிவிழாவும், “அரும்பு” சஞ்சிகை வெளியீடும்.

SHARE
மட்.புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயலயத்தில் வருடாந்த ஒளிவிழாவும், “அரும்பு” சஞ்சிகை வெளியீடும்.
மட்.புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலய வருடாந்த ஒளிவிழாவும், ஆரம்பப்பிரிவு மாணவர்களின் “அரும்பு” சஞ்சிகை வெளியீடும் வித்தியாலய அதிபர் ரமேஸ் கலைச்செல்வன் தலைமையில் வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில்  இடம்பெற்றது.


இந்நிகழ்வில் மாணவர்களினால் கரோல் கீதம் இசைக்கப்பட்டு, பாலன் பிறப்பு தொடர்பான நற்செய்தி வாசிக்கப்பட்டதோடு பல்வேறு நாட்டிய நிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டன.


சிரேஷ்ட ஆரம்பப்பிரிவு ஆசிரியை திருமதி.ப.தவராசா ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான “அரும்பு” சஞ்சிகையினை ஆரம்பப்பிரிவு வித்தியாலய அதிபர் ரமேஸ் கலைச் செல்வனுக்கு வழங்கி வெளியிட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் உமாபரமேஸ்வரம், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: