31 Dec 2019

பிரதேச அபிவிருத்தி தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமாருடன் கலந்துரையாடல்.

SHARE
பிரதேச அபிவிருத்தி தொடர்பில்  பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமாருடன் கலந்துரையாடல்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சமூக அபிவிருத்தி சங்கங்களுக்கும், பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமாருக்கும் இடையில் கிராமிய அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமாருக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் களுதாவளை, மற்றும் தேத்தாத்தீவு பிரிவுகளின் சமூக அபிவிருத்திச் சங்கங்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மற்றும் இளைஞர் யுவதிகளுக்கிடையிலான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பொதுஜன பெரமுன கட்சி மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்றது. 

இதன்போது பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பி.சந்திரகுமார், மாவட்ட மகளிர் அணித் தலைவி எஸ்.காஞ்சனா, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இணைப்பாளர் கு.கணேசலிங்கம்,  உள்ளிட்ட பலர் 

இதன்போது கலந்து கொண்டிருந்தனர். 
இதன்போது கிராமிய அபிவிருத்தி செயற்பாடுகள், இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்புக்கள், உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் கலந்து கொண்டோர்களால் அமைப்பாளரிடம் முன்வைக்கப்பட்டன.

வறுமை நிலையிலுள்ள மக்களை மேம்படுத்தும் வகையில் எமது அரசாங்கத்தால் எதிர்வரும் புதுவருட முதற்பகுதியில் பல வாழ்வாதார திட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இதேவேளை தற்போது சப்ரிகம எனும் கிராமத்திற்கு ஒரு திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அவைரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இவற்றினைவிட மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திகளை மன்நெடுக்க திட்டமிட்டுள்ளோம். என இதன்போது பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார். 







SHARE

Author: verified_user

0 Comments: