20 Nov 2019

ஓய்வு பெற்று செல்லும் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

SHARE
ஓய்வு பெற்று செல்லும் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.  
இலங்கை பொலிஸ் சேவையில் 37 வருடங்கள் சேவையாற்றி பல பதவி  உயர்வுகளை பெற்று  2017 ஆண்டு முதல் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி ஒய்வு பெற்று செல்லும் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிரபர் எச் .டி .கே .எஸ் ஜயசேகர வை  கௌரவிக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது
நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக வாகன அணிவகுப்பு மரியாதையுடன் மைதானத்திற்கு அழைத்துவரப்பட்ட பொலிஸ்மா அதிபரை பொலிஸ் அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டு மரியாதை  செலுத்தப்பட்டது   
இதனை தொடர்ந்து இவரை கௌரவிக்கும் வகையில் இலங்கை பொலிஸ் சேவையில் 37 வருட சேவையினை பாராட்டி சிறப்புரைகள் இடம்பெற்றதுடன் நினைவு சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்  
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , மாநகர ஆணையாளர் கே .சித்திரவேல்  கிழக்கு மாகான பொலிஸ் மா அதிபர் , மட்டக்களப்பு ,அம்பாறை பிரதி பொலிஸ் அத்தியட்சகர்   சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ,மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ்மா அதிபரின் குடும்ப உறுப்பினர்கள் என்  பலர் கலந்துகொண்டனர் கலந்துகொண்டனர்.








SHARE

Author: verified_user

0 Comments: