7 Oct 2019

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் வெடிக்காத மோட்டார் குண்டு மீட்பு

SHARE
மட்டக்களப்பு-திருகோணமலை வீதியிலுள்ள  பிள்ளையாரடி பிரதேசத்தில் கட்டிட நிர்மாண நில அகழ்வின் போது மோட்டார் குண்டு ஒன்றை திங்கட்கிழமை (07) மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறித்த பிரதேசம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியாகும். இக்காணியிலே கட்டிட நிர்மாண வேலைக்காக நிலத்தை கனரக பக்கோ இயந்திரம் மூலம் சம்பவதினமான திங்கட்கிழமை தோண்டினார்கள். இதைன்போதே மோட்டார் குண்டு ஒன்று வெளியில் வந்துள்ளதையடுத்து இவ்விடயமாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்து வந்த விசேட அதிரடிப்படையினர், குண்டு செயலிழக்கும் பிரிவு, மற்றும் பொலிசார் குறித்த குண்டை மீட்டுள்ளதுடன் இந்த மோட்டார் குண்டு யுத்தகாலத்தில் பாவிக்கப்பட வெடிக்காத நிலையில் இருந்துள்ள குண்டு என பொலிசார் தெரிவித்தார்கள். 







SHARE

Author: verified_user

0 Comments: