மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள ஜ.எஸ்.ஜ.எஸ் தற்கொலை குண்டுதாரியான முகமட் ஆசாத்தின் தலை, உடற்பாகங்கள் இன்று காத்தான்குடி முஹைதீன் பொது மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளன.கடந்த ஏப்பிரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற் கொண்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய முகமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களே இவ்வாறு புதைக்கப்பட்டுள்ளது.
தற்கொலைதாரியின் பூதவுடலை புதைப்பது தொடர்பில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றிருந்த நிலையில் இன்று இறுதியாக காத்தான்குடி பொது மயானத்தில் நீதிமன்ற உத்தரவின் கீழ் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் இரவேடு இரவாக குறித்த உடற்பாகங்கள் புதைக்கப்பட்ட நிலையில் அதற்கு பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து புதைக்கப்பட்டிருந்த குறித்த நபரின் உடற்பாகங்களை நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. (tx (vom)
0 Comments:
Post a Comment