10 Aug 2019

மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வரலட்சுமி பூஜை.

SHARE
மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வரலட்சுமி பூஜை.
மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை (09) வரலட்சுமி பூஜை நிகழ்வுகள் சிவ ஸ்ரீ  நாராயண சன்முகநாத குருக்கள் தலைமையில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.

விநாயர் வழிபாடுகளுடன் விசேட  அபிசேகம் பூஜைகளுடன்  பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.

வரலட்சுமி விரதம் சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜித்தல் இதன் சிறப்பு. திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பிருந்து காப்பு கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்வது வழக்கம். 

இந்த பூஜையில் நூற்றுகணக்கான சுமங்கலிப் பெண்கள் கலந்து கொண்டனர் அதைத்தொடர்ந்து இதன்போது வசந்த மண்டப பூஜை நடைபெற்று அம்பாளுக்கு தீபாராதனைகள்  நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட அம்பாளின் உள்வீதி வலம்வரும் போது பூஜையில் கலந்துகொண்ட பெண்கள் தீபங்களை எடுத்து அம்மாளுடன் வலம் வருவது சிறப்பாக நடைபெற்றது.






















SHARE

Author: verified_user

0 Comments: