18 Jun 2019

கோட்டாவுக்காக வியாழேந்திரனும் ஹிஸ்புல்லாவும் ஒரே மேடையில் வாக்குச் சேகரிப்பார்கள் -சிறிநேசன்.

SHARE
கோட்டாவுக்காக வியாழேந்திரனும் ஹிஸ்புல்லாவும் ஒரே மேடையில் வாக்குச் சேகரிப்பார்கள் -சிறிநேசன்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஆகியோர் ஒரே மேடையில் நின்று கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக வாக்குச்சேகரிப்பார்கள் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக சபாநாயகர் கருஜயசூரியவோ அல்லது சஜித் பிரேமதாஸ அல்லது ரணில் விக்ரமசிங்கவோ வேட்பாளராக களமிறக்கப்படலாம்.

அதேபோல் பொதுஜன பெரமுன சார்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ களமிறக்கப்படலாம்.

அவ்வாறு கோட்டா களமிறக்கப்பட்டால் தற்போது முரண்பட்டுவரும் ஹிஸ்புல்லா மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் ஒரே மேடையில் நின்று கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக வாக்குச்சேகரிப்பார்கள்” என மேலும் தெரிவித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: