8 May 2019

மட்டு.புதுக்குடியிருப்பில் மின்கம்பத்துடன் மினிரக வாகனம் பலமாக அடிக்கப்பட்டு பாரிய விபத்து. 2 பேர் காயம்.

SHARE
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை(7) நள்ளிரவு 12.00 மணியளவில்  இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாகவுள்ள மின்கம்பத்தில் மினிரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான பெயர்ப்பலகையும், மின்கம்பத்தையும் பலமாக அடித்து மின்கம்பம் மினிரக லொறியில் வீழ்ந்துள்ளது.

வாழைச்சேனையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பாலப்பழத்தை கொள்வனவு செய்திட்டு அதனை கல்முனையில் சென்று விற்றுவிட்டு மீண்டும் அவர்கள் கல்முனையிலிருந்து மீண்டும் புறப்பட்டு கொண்டிருக்கையில் பதுக்குடியிருப்பில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் வாழைச்சேனையைச் சேர்ந்த நௌசாத்(வயது-30), இர்ஷாத்(வயது-29) ஆகியோர்கள் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்விபத்து சம்பந்தமாக காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் விபத்துக்கான விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்கள்.

மின்கம்பம் மூன்று துண்டுகளாக உடைக்கப்பட்டும், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான பெயர்ப்பலகை உடைக்கப்பட்டு வீசப்பட்டும், வாகனத்திற்கும் பாரிய சேதமேற்பட்டுள்ளது.







SHARE

Author: verified_user

0 Comments: