11 Apr 2019

நச்சு வட்டத்திற்குள் விழுகின்றபோதுதான் மக்கள் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது.

SHARE
கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் கூட்டுறவுத்திணைக்களத்தினூடாக மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு ஒருகோடி 28 இலட்சம் ரூபாய் சுயதொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது. நுண்கடன் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள்  அதனை மீளச் செலுத்த முடியாமல் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதை நாம் அவதானித்துள்ளோம். இது கடன் நச்சுவட்டமாகும். மக்கள் இவ்வாறு கடன் நச்சு வட்டத்திற்குள் விழுகின்றபோதுதான் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது.
என கூட்டுறவுத்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தெரிவித்துள்ளார். 

கிராம சக்தி ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் கூட்டுறவுத் திணைக்களத்தின் அனுசரணையில் கூட்டுறவுத் திணைக்களத்தின் கீழுள்ள சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு கடன்னுதவி வழங்கும் நிகழ்வு களுவாஞ்சிகுடி கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தில் அச்சங்கத்தின் தலைவர் வைத்தியர் கு.சுகுணன் தலைமையில் வியாழக்கிழமை (11) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவியை வழங்கி வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்… 

கடன்களைப் பெற்ற மக்கள் அதனை மீளச் செலுத்த முடியாமல் தங்களது உயிரையே மாய்த்துக் கொண்ட நிலையையும் நாம் அவதானித்துள்ளோம். இவ்வாறான நிலையிலிருந்து எமது மக்களை கைதூக்கி விடும் நோக்கில் தற்போது கூட்டுறவுத் திணைக்களத்தினூடாக மக்களுக்கு தொழில் முயற்சிக் கடன்களை வழங்கி வருகின்றோம்.  

இலங்கையைப் பொறுத்தவரையில் எமது மாவட்டம் மிகவும், வறுமையை மாவட்டமாக கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கூட்டுறவு அமைப்புக்கள் சமூக பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்துவரும் அமைப்பாக மிளிர்கின்றது. கடந்த காலங்களில் இவ்வமைப்புக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு இயங்க முடியாமல் இருந்தன. ஆனால் தற்போது சகல கூட்டுறவு அமைப்புக்களும், புத்துயிர் பெற்று செயற்பட்டு வருகின்றன. 

இலங்கையில் எந்த நிதி நிறுவனங்களும் வழங்காத வட்டிவீதமாக அதவது 8 வீத வருடாந்த வட்டி வீத்திற்கு நாம் மக்களுக்கு இக்கடன் உதவிகளை வழங்கிவருகின்றோம். கூட்டுறவு நிதியில் அதிகளவு நிதியில் அதிக பயனாளிகளுக்கு கடனாக வழங்கிய சந்தர்ப்பாம் இதுவாகத்தான் உள்ளது.  இந்த நிதியை மக்கள் எக்காரணம் கொண்டும் வேறு காரணங்களுக்குப் பயன் படுத்தக் கூடாது. உங்களது சுயதொழில் அபிவிருத்திக்கு மாத்திரம் பயன்படுத்த வேண்டும். 

மக்கள் இவ்வாறு பெறும் கடனிலிருந்து தொழில்களை விருத்தி செய்து படிப்படியாக வருமானத்தை அதிகரித்தால் அது சிறப்பானமாக அமையும். அவ்வாறு பொருளாதார ரீதியாக பலம் பொருந்தியவர்களாக இருந்தால்தான் எதிர்காலத்தில் சிறந்த பிள்ளைகளை எமது நாட்டுக்கு வழங்க முடியும். அதுபோல் போதை வஸ்த்துக்களுக்கு எமது மக்கள் அடிமையாகாது அதற்குள் சிக்காமல் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இந்த மக்கள் சக்தி வாரத்தில் மக்கள் இதனையும் ஒரு கருப்பொருளாக எடுத்து செயற்பட வேண்டும். 

மக்கள் சேமிப்புப் பழகப்கத்தை கடப்பிடிக்க வேண்டும். அவ்வாறு சேமிப்புப் பழக்கத்தை பேணிவந்தால் எதிர்காலத்தில் எவரிடமும் கடன்பெறாமல் உங்களது சுயதொழில்களை மேற்கொள்ள இலகுவாக அமையும்.  என அவர் தெரிவித்தார்.

இதன்போது களுவாஞ்விகுடி கூட்டுறவு வலயத்திற்குடப்பட்ட வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி, மற்றும் பட்டிப்பளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 85 பயனாளிகளுக்கு தலா 25000 ரூபா வீதம் கடன்கள் வழங்கப்பட்டன. இதன்போது கூட்டறவுத்திணைக்கள அதிகாரிகள், அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்த கொண்டிருந்தனர்.














SHARE

Author: verified_user

0 Comments: