இலங்கைத் தமிழரசுக கட்சியின் ஸ்த்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 42 வது நினைவு தினம் வெள்ளிக்கிழமை (26) மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் உருவச் சிலை வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் க.துரைராசசிங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீயோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதிமுதல்வர் க.சத்தியசீலன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களாக மா.நடராசா, பி.இந்திரகுமார், வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், வாலிபர் முன்னணியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தைந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
0 Comments:
Post a Comment