17 Feb 2019

கடந்த செவ்வாய்கிழமை காணாமல் போனவர் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்டட தேற்றாத்தீவு கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் கடந்த வெசவ்வாய்கிழமை (12) ஒருவர் காணாமல் போயிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். 
இந்நிலையில் வெள்ளிக்கிழமை (15) காலை களுதாவளை குருகுலம் வீதியில் அமைந்துள்ள நிர் நிரம்பிய குழி ஒன்றிலிருந்து குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் தேற்றாத்தீவு இரண்டாம் பிரிவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய கோபாலபிள்ளை சிறிஸ்கந்தராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் புத்திசுவாதீனமுடையவர் எனவும் கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










SHARE

Author: verified_user

0 Comments: