1 Jan 2019

மாற்றுத் திறனாளிகளின் நலனோம்பு சேவைக்காக அலுவலகம் திறப்பு

SHARE
மாற்றுத் திறனாளிகளின் நலனோம்பு சேவைக்காக மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையில்  உதய ஒளி அமைப்பின் அலுவலகம் திங்கட்கிழமை 31.12.2018 திறந்து வைக்கப்பட்டதாக அவ்வமைப்பின் தலைவர் கே. பாக்கியராசா தெரிவித்தார்.
நிகழ்வில் உதய ஒளி அமைப்பின் பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு அலுவலகத்தின் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் மாற்றுத்திறனாளிகளது வாழ்வாதாரத்திற்காக அவர்களது குடும்பத்தினருக்கு ஒரு தொகுதி சுயதொழில்களுக்குரிய உபகரணங்களும் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் எஸ். புஸ்பலிங்கம் பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் எம்.சுந்தர்ராஜன் பட்டிப்பளை பிரதேச சபையின் உறுப்பினர்கள் வீ.   கிரேஸ்குமார் எஸ். லோகிதராஜா களுவாஞ்சிகுடி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் ரீ. வரதராஜன், மனித நேய காப்பகத்தின் தலைவர் கே. குபேந்திரன் உட்பட மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர்.



SHARE

Author: verified_user

0 Comments: