10 Jan 2019

சிவனேசதுரை சந்திரகாந்தனின் வழக்கு விசாரணை பெப்ரவரி 21,22 திகதிக்கு ஒத்திவைப்பு

SHARE
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) வழக்கு விசாரணை பெப்ரவரி 21,22 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தொடர்பாக குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது சுயமாக வழங்கப்பட்டதா அல்லது இல்லையா என்பது பற்றிய கட்டளை வாக்குமூல விசாரணை புதன்கிழமை 09.01.2019ஆம் திகதி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது, எதிரிகள் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வாவும், வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்கள சிரேஷ்ட அரச சட்டத்தரணி மாதவ தென்னகோனும் தத்தமது சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.    

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 1,2ம் எதிரிகள் வழங்கிய  குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது சுயமாக வழங்கப்பட்டதா அல்லது இல்லையா என்பது தொடர்பான கட்டளை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்றது.

இந்த வழக்கு விசாரணைக்காக    சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட 6 சந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துவரப்பட்டிருந்தனர்.

2005 - டிசெமn;பர் மாதம் 25ம் திகதி நத்தார் நள்ளிரவு ஆதாரனையின்போது, மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் வைத்து ஜோசெப் பரராஜசிங்கம் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: