31 Jan 2019

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழா எதிர்வரும் 02ம் திகதி

SHARE
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழா எதிர்வரும் 02ம் திகதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழாவ எதிர்வரும் 02ம் திகதி வாகரை பால்சேனையில் கோறளைப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் சி.கோணலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான ம.அ.சுமந்திரன் கலந்து கொண்டு பொங்கற் பேருரை ஆற்றவுள்ளதோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உபதலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன் போது பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: