இலங்கையில் சுனாமி தாக்கமுற்று 14 வருட நினைவு நாள் புதன்கிழமை (26) பல இடங்களிலும் அனுஸ்ட்டக்கப்படும் அதேவளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல இடங்களில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குபட்டபட்ட ஓந்தாச்சிமடம் எனும் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத் தூபில் இந்நிகழ்வு புதன்கிழமை (26) காலை இடம்பெற்றது.
இக்கிராம பொதுமக்கள், உயிர் நீத்தவர்களின் உறவினர்கள், மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச தவிசாளர் ஞா.யோகநான், பிரதேசபை உறுப்பினர் சற்குணம், கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள், என பலர் இதன்போது கலந்து கொண்டு நினைணவுச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தினர். மேலும் இதன்போது அஞ்சலி நினைவு உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
சுனாமித் தாகத்கத்தினால் ஓந்தச்சிமடம் கிராமம் முற்றாக அழிவுற்றதோடு, அக்கிராமத்தில் 44 பொதுமக்கள் அவ்வனர்த்தத்தில் சிக்குண்டு மரணமடைந்திருந்தனர்.
0 Comments:
Post a Comment