21 Dec 2018

போரதீவுப் பற்றுப் பிரதேச கலாசார விழாவும், இலக்கிய விழாவும்.

SHARE
போரதீவுப் பற்றுப் பிரதேச கலாசார விழாவும், இலக்கிய விழாவும், வியாழக்கிழமை (20) வெல்லாவெளியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகியின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது போராசிரியர்  செ.யோகராசா, கோட்டக்கல்வி அதிகாரி த.அருள்ராசா, மற்றும், பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், கல்விமான்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதில்  பல பாரம்பரியக் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் பிரதேசத்திலிருந்து கலைத்துறையில் தடம் பதித்த கல கலைஞர்களும், எழுத்தாளர்களும், கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் புதிய மழை எனும் புத்தக காண்காட்சிக் கூடடம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டதுடன், மருதம் எனும் நூலும் வெளியீட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




















































SHARE

Author: verified_user

0 Comments: