இலங்கைப் போக்குவரத்துச் சபை கிழக்கு மாகாண பிராந்திய செயலாற்று முகாமையாளராகப் பதவி வகித்த எம்.ஐ. அப்துல் அஸீஸ் தனது 60வது வயதில் 2018 டிசெம்பெர் 31ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றுள்ளார்.
இலங்கைப் போக்குவரத்துச் சபையில் 1981ஆம் ஆண்டு காப்பாளராக நியமனம் பெற்ற அப்துல் அஸீஸ், டிப்போ பரிசோதகராக, பொறுப்பதிகாரியாக, கணக்காய்வாளராக, விசாரணை அதிகாரியாக, டிப்போ முகாமையாளராகவும் கடைசியாக இலங்கைப் போக்குவரத்துச் சபை கிழக்கு மாகாண பிராந்திய செயலாற்று முகாமையாளராகப் பணியாற்றிய நிலையில் 38 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெற்றுள்ளார்.
இவர் வாழைச்சேனை, காத்தான்குடி, கல்முனை, மட்டக்களப்பு, ரெதிதென்ன ஆகிய இடங்களில் அமைந்துள்ள பஸ் டிப்போக்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றியுள்ளார்.
0 Comments:
Post a Comment