27 Dec 2018

நமது தாய் வீடு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி

SHARE
நமது தாய் வீடு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகைகள் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. 
அந்த பதாகைகளில் கைச் சின்னம் வரையப்பட்டுள்ளது. புதன்கிழமை இரவு அல்லது, வியாழக்கிழமை அதிகாலை வேளைகளில் இவை ஒட்டப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்பேதைய நிலையில் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த எவரும்  நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத நிலையில் எதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேண்டி தற்போதிருந்தே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் தமது வேலைகளை ஆரம்பித்து விட்டார்களோ என எண்ணத் தோணுவதாக களுவாஞ்சிகுடி பிரதேச அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

கடந்த வருடங்களில் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியிலிருந்து 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். கடைசியாக 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இத்தொகுதியிலிருந்து எவரும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.




SHARE

Author: verified_user

0 Comments: