ஏறாவூர் நகர சபையின் அடுத்த ஆண்டிற்கான வரவு- ஏகமானதாக நிறைவேறியது
ஏறாவூர் நகர சபையின் அடுத்த ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டம் வியாழக்கிழமை 20.12.2018 ஏகமானதாக நிறைவேறியதாக நகர மேயர் இறம்ழான் அப்துல் வாஸித் தெரிவித்தார்.
நகர சபையின் 17 உறுப்பினர்களில் வருகை தந்திருந்த 15 உறுப்பினர்களும் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஏறாவூர் நகர சபையில் ஐக்கிய தேசியக்கட்சி , முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு , ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் சுயேச்சைக் குழு ஆகிய அணிகளைச் சேர்ந்த 17 உறுப்பினர்கள் இச்சபையில் அங்கம் வகிக்கின்றனர்.
அடுத்த வருடத்திற்கு எதிர்பார்க்கப்படும் வருமானமாக 137 மில்லியன் 7 இலட்சத்து 63 ஆயிரம் ரூபா எனவும் வருமாக 137 மில்லியன் 7 இலட்சத்து 61 ஆயிரம் ரூபா எனவும் முன்மொழியப்பட்டது.
நகர மேயர் இறம்ழான் அப்துல் வாஸித் மற்றும் உப தவிசாளர் எம்.எல். றெபுபாசம் ஆகியோர் முன்மொழிவுகளை சபையில் வாசித்தனர்.
வரவு- செலவுத்திட்டத்தின் வருமான விவரம் வாசிக்கப்பட்டதையடுத்து செலவு விவர வாசித்தலின்போது 'முழுமையாக வாசிக்கத் தேவையில்லை, அனைத்து விபரங்களும் மிகத்தெளிவாகக் குறிப்பட்டுள்ளதனால் சபை அனுமதி கோரலிற்குச் செல்லலாம்" என சபை உறுப்பினர்கள் தெரிவித்ததையடுத்து வரவு செலவுத் திட்டம் விவாதமின்றி ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
0 Comments:
Post a Comment