7 Nov 2018

அடைமழையினால் பாடசாலை வளாகங்கள் கல்வி அலுவலகங்களில் வெள்ள நிலைமை

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாகப் பெய்து வரும் அடைமழையினால் பல தாழ்நிலப் பகுதிகளும் நீரேந்துப் பிரதேசங்களை அண்டிய இடங்களும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு ஏறாவூர் நகர பிரதேசத்தில் நிலவிய அடைமழையினால் நகரமும் சூழலும் வெள்ள நீரால் சூழப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

குறிப்பாக ஏறாவூரிலுள்ள மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அலுவலகம் உட்பட பிரதேசத்திலுள்ள பல பாடசாலை வளாகங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்பதைக் காணமுடிந்தது.
இதனால் அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் மிகவும் சிரமத்தோடு பாடசாலைகளுக்கும் அலுவலகங்களுக்கும் செல்ல வேண்டியேற்பட்டது.

மட்டக்களப்பு மத்தி கல்வி அலுவலகத்தின் ஒரு பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பாதுகாப்புக் கருதி அலுவலக தளவாடங்களையும் ஆவணங்களையம் அப்புறப்படுத்தும் முயற்சியில் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

புதன்கிழமை 07.11.2018 நண்பகல் வரை மட்டக்களப்பின் சில பகுதிகளில் அடைமழை சற்று ஓய்ந்திருந்தது.



SHARE

Author: verified_user

0 Comments: