20 Nov 2018

எழிலனின் தந்தை மரணம்

SHARE
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரான எழிலனின் தந்தை கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை திங்கட்கிழமை 19.11.2018  காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சின்னத்துரையின் சடலம் கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ளதென்றும் இறுதிக்கிரியை தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென்றும் உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் இறுதித் தறுவாயில்  தனது கணவரான எழிலன் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாக எழிலனின் மனைவியும் வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்து அது தொடர்பான விசாரணைகள் தற்போதும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

SHARE

Author: verified_user

0 Comments: