19 Nov 2018

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் தேவஸ்தானத்தில் ஏகாதச ருத்ர வேள்வி ஆரம்பம்-(வீடியோ)

SHARE
அகத்தியர் பெருமான் திருவானைப்படி சித்தர்களின் குரல் மஹா சித்தர்களின்; ஏற்பாட்டினால் உலக நன்மைக்காகவும் , உலகில் மாபெரும் சித்தர்களின் அருளாட்சி மலரவும் , ஈழவள நாடு மாபெரும் சிவபூமியாகவும் , ஸ்வர்ண பூமியாகவும் , குபேர பூமியாகவும் திகழவும் கார்த்திகை மாதம் 2018 -19, 20, 21, 22, ஆகிய திகதிகளில் இலங்கையில் மட்டக்களப்பில் களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் தேவஸ்தானத்தில் இடம்பெறுகின்றது.
இதன் ஆரம்ப நிகழ்வு திங்கட் கிழமை (19) இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள மாகா சித்தர்களினால் இந்த ஏகாதச ருத்ர வேள்வி மிகவும் பிரம்மண்டமான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்தும் ஆயிரக்கணக்கான பக்கதர்கள் வருகை தந்துள்தோடு, வெளிநாடுகளிலுமிருந்து பலர் இவ்வேள்யியைத் தரிசிக்க வருகை தந்துள்ளனர்.

ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வியின் சிறப்புக்களும் அதிலுள்ள உண்மைகளும் .

இந்த நான்கு நாட்களும் (நவம்பர் 19, 20, 21, 22,) ஆறு காலம் நடைபெறவுள்ள ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வியின் அதி சிறப்பாக வேத மந்த்ர தந்திர சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற சதுர்வேத பண்டிதர்களான சிவாச்சார்யார்கள் , வேத உபனிக்ஷதங்களை உலகிற்கு அளிப்பதக்காக தில்லை வாழ் அந்தணர் வழியில் வந்த பல தீக்ஷிதர்களும்
சித்த மரபில் வந்த பல சித்த குருமார்களும் பல ருத்ர உபாசகர்களும் சிவனடியார்களும் இணைந்து ருத்ரஷக்திகளுக்குரிய மூல மந்திரங்கள் , காயத்ரி மந்திரங்கள் , மாலா மந்திரங்கள் , விசேட மந்திரங்கள் , ரகசிய மந்திரங்கள் மூலமாக அக்கினியிலே ருத்ர உபனிஷத்திலே சொல்லப்பட்டதட்கு நடைபெறுவதால் வாழ்க்கையில் எப்பாற்பட்ட தடைகளையும் உடைத்தெறிந்து அருளையும் பொருளையும் வரங்களையும் கேட்பதற்கு முன்னமே அள்ளி கொடுக்க கூடிய வல்லமை இந்த ருத்ர வேள்விக்கு உண்டு என சொல்லப்படுகின்றது. 































SHARE

Author: verified_user

0 Comments: