23 Nov 2018

வைத்தியகலாநிதி சின்னத்தம்பி தட்சணாமூர்ததி இறைபதம் அடைந்துள்ளார்

SHARE
வைத்தியகலாநிதி சின்னத்தம்பி தட்சணாமூர்ததி இறைபதம் அடைந்துள்ளார்
பிறப்பிடம் -திருப்பழுகாமம் வசிப்பிடம் – மட்டக்களப்பு
அவர் சுகாதார சேவையில் வைத்தியராக, சுகாதார வைத்திய அதிகாரியாக, தொற்று நோயியல் வைத்திய நிபுணராக, வைத்திய அத்தியட்சராகவும் கடமை புரிந்துள்ளார்
வாழைச்சேனை பிரதேசத்தில் நீண்டகாலம் வைத்திய சேவையாற்றி அப்பிரதேச மக்களின் நன்மதிப்பை பெற்று அனைவரிடமும் அன்பாகவும் இன்முகத்துடனும் பழகி ஒரு உறவினர்போல அனைவரிடமும் தொடர்பாக இருந்த வைத்திய அத்தியட்சகர் அவர்கள் நேற்று இடம்பெற்ற விபத்தின் காரணமாக இறைபதம் அடைந்துள்ளார்
வாழைச்சேனையிலிருந்து  இருந்து மட்டக்களப்பிற்கு வீடுநோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தவேளை மாடொன்றுடன் மோதுண்டு அபாயகரமான நிலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: