இதற்கமைய கூட்டமைப்பின்நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் வியாழேந்திரனுக்கு மஹிழந்த – மைத்ரி அரசாங்கத்தில் கிழக்குமாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருக்கின்றது.
இன்றைய தினம் கனடாவிற்குசென்று நாடு திரும்பியிருந்த சதாசிவம் வியாழேந்திரனுடன் மஹிந்த தரப்பினர் நீண்டநேரம் கலந்துரையாடிய நிலையிலேயே அவர் மஹிந்த – மைத்ரி அரசாங்கத்துடன் இணைய இணக்கம்தெரிவித்திருக்கின்றார்.
இதனையடுத்துகட்டுநாயக்கவிலுள்ள நட்சத்திர விடுதியில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்குஅழைத்துச் செல்லப்பட்ட வியாழேந்திரன் அங்கு வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனமுன்னிலையில் பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
0 Comments:
Post a Comment