23 Nov 2018

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் மகிழூர் கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலய வீதிக்கு கொங்கீரிட் இடும் பணி ஆரம்பம்.

SHARE
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் மகிழூர் கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலய வீதிக்கு கொங்கீரிட் இடும் பணி ஆரம்பம். 
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் மகிழூர் கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலய வீதிக்கு கொங்கீரிட் இடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மகிழூர் வட்டாரத்தில் உள்ள கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலய வீதிக்கு கொங்கீரிட்டு  (Concrete இடும் வேலையானது வெள்ளிக்கிழமை (23) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா. யோகநாதன், மகிழூர் வட்டார உறுப்பினர் க.உத்தமன், பிரதேச சபை செயலாளர் க.லட்சுமிகாந்தன் மற்றும் உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

மகிழூர் வட்டார உறுப்பினர் க.உத்தமனின் அயராத முயற்சியின் பயனாகவும் ஊர் மக்களின் கோரிக்கைக்கு அமைய இவ் வீதியானது 20 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படுகின்றது. இதனால் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், வர்தகர்கள், பொதுமக்கள், என அனைவரும் நன்மை அடைவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பிரதேச மக்களின்  நோக்கம் ஓரளவு பூர்த்தியடைவதாகவும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை இவ்வருடத்தில் புதிய ஆட்சி அமைத்ததிலிருந்து மக்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றி வருவதாக அப்பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் இதன்போது தெரிவித்தார். 



SHARE

Author: verified_user

0 Comments: