பிரதேச ஊடகவியலாளர்களுக்கு வீடு வழங்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான நேர்முகப் தேர்வு செவ்வாய்க்கிழமை 30.10.2018 இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தகவல் உத்தியோகத்தர் வடிவேல் ஜீவானந்தன் தெரிவித்தார்.
இவ்வீட்டுத் திட்டத்தில் தங்களையும் உட்படுத்திக் கொள்வதற்கு தகைமை பெறும் வகையில் இடம்பெறும் நேர்முகத் தேர்விற்கு வருமாறு பிரதேச ஊடகவியலாளர்களுக்கு கடிதம்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 9 மணி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட செலகத்தில் இடம்பெறும் நேர்முகத் தேர்வில் தேசிய அடையாள அட்டை, ஊடக நிறுவன அடையாள அட்டை, தகவல் திணைக்கள அடையாள அட்டை, சேவைச் சான்றிதழ், கிராம சேவகரின் சான்றிதழ், கடந்த யுத்த காலத்தில் தங்களுக்கு ஏதாவது பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பின் அதனை நிரூபணம் செய்யும் ஆவணங்கள், ஊடகத்துறையில் கிடைத்த விருதுகள் உட்பட ஊடகத்துறைப் பங்களிப்புக்கள் உள்ளிட்ட இன்னோரன்ன ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment