27 Oct 2018

புதிய பிரதமருக்கு ஆதரவாக பட்டாசு முழக்கங்கள்

SHARE
முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமாக மஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள செய்தி வெளியாகிய மறுகணமே ( வெள்ளிக்கிழமை 26.10.2018 இரவு ) மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் ஆங்காங்கே பட்டாசு வெடிகள் முழங்கின.
இப்பிரதேசத்தில் பெய்த மழையையும், கார் இருளையும், பொருட்படுத்தாத நிலையிலும், மோட்டார் சைக்கில் ஆரவார கோசங்களை எழுப்பியவாறு பட்டாசு வெடிகளைக் கொடுத்தி தமது மகிழ்ச்சியை இளைஞர்கள் தெரிவித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.





SHARE

Author: verified_user

0 Comments: