22 Oct 2018

வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

SHARE
ஏறாவூர் நகரிலுள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டார் என்ற  முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை 21.10.2018 கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை 20.10.2018 இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீடு புகுந்த நபர் வீட்டிலிருந்தவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு கத்தியைக் கொண்டு தாக்கியதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை மெற்கொண்டு வந்தனர்.

இது விடயமாக விசாரணை நடாத்தி வந்த பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: