11 Oct 2018

பூர்ணிமா கருணாகரன் அவர்கள் எழுதியுள்ள பெட்டைக் காகங்களிடும் குயில் குஞ்சுகள் என்னும் கவிதை நூல் அறிமுக விழா

SHARE
பூர்ணிமா கருணாகரன் அவர்கள் எழுதியுள்ள பெட்டைக் காகங்களிடும் குயில் குஞ்சுகள்  கவிதை நூல் அறிமுக விழா மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை (04) இடம்பெற்றது.
சமூக அவலங்களைச் சொல்லும கவிதை நூலான பெட்டைக் காகங்களிடும் குயில் குஞ்சுகள்  நூல் வெளியீட்டு விழாவில் வரவேற்புரையினை கவிஞர் அலியார் சுபைர் நிகழ்த்தினார்.

பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவண பவன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த், ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் கல்லூரி பிரதி அதிபர் திருமதி எஸ்.பி.ரவிச்சந்திரா, கௌரவ அதிதியாக முன்னாள் வட கிழக்கு மாகாண கலாச்சாரப் பணிப்பாளர் எஸ்.எதிர்மன்னசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நூல் அறிமுக உரையினை கவிஞர் ஷல்மானுல் ஹரீஸ், நூல் கருத்துரையினை மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் க.தவராஜா, பேராசிரியர் செ.யோகராஜா நூல் நயவுரையினையும் வழங்கினர்.

பெட்டைக் காகங்களிடும் குயில் குஞ்சுகள் கவிதை நூலின் ஆசிரியர் கவிதாயினி பூர்ணிமா கருணாகரனின் ஏற்புரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. நிகழ்ச்சித் தொகுப்பினை கிஸ்கந்த முதலியார் மேற்கொண்டார்.

தமிழ் மொழி வாழ்த்துடன் ஆரம்பமான நிகழ்வில் வரகை தந்திருந்தவர்களுக்கு அதிதிகளின் கைகளால் பெட்டைக் காகங்களிடும் குயில் குஞ்சுகள்  கவிதை நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.






SHARE

Author: verified_user

0 Comments: