8 Aug 2016

வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்

SHARE
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பகுதியில் திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி
விபத்தில் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடி -06, கர்பலா வீதி நூரணியா பள்ளிவாயலுக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் எல்ப் வண்டியும் மோதியே விபத்து நேர்ந்தது.
இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற முஹம்மது சலீம் (வயது-52) என்பவர் படுகாயங்களுக்குள்ளாகி உடனடியாக  காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். 




SHARE

Author: verified_user

0 Comments: