14 Aug 2016

கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய இருவர் கைது

SHARE
கஞ்சாவை தம்வசம் விற்பனைக்காக வைத்துக் கொண்டு வீதியில் நடமாடிய இருவரை ஞாயிற்றுக் கிழமை (ஓகஸ்ட் 14, 2016)
தாம் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபர்கள் இருவரிடமிருந்தும் மொத்தம் 6500 மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் முறையே 28, 48 வயதுகளையுடையவர்கள் என்றும் இருவரும் ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபர்கள் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராகேணி வீதியில் உலாவந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: